Friday, September 29, 2023

Latest Posts

காரைநகரில்  உள்ள படகுகள் ஏலத்தில் விடும்பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் இன்று சற்றுமுன்  ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி  கொழும்பில் இருந்து வந்த  அதிகாரிகள் குழுவின் முன்னிலையில்  ஆரம்பமானது.

இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50ற்கும் அதிகமனோர் பார்வையிட்டனர்.

இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளே இன்று ஏலம்விடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.