Wednesday, March 29, 2023

Latest Posts

எல்லை தாண்டிய 16 தமிழக மீனவர் கைது.

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் ஊடுருவிய இரு இந்திய விசைப் படகுகளில் பயணித்த 16 தமிழக மீனவர்கள்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகை பட்னத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த  81ஆம் இலக்க படகு அனலை தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்களுடன் எல்லை தாண்டிய சமயமும்
நாகைபட்டினம் பட்டினத்தின் 7818ஆம் இலக்கப் படகு 12 மீனவர்களுடன் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் எல்லை தாண்டிய சமயமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகின்றனர்.

மயிலிட்டித்துறைமுகம் கொண்டு வரப்படும் தமிழக மீனவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆயர் செய்யப்படவுள்ளனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.