ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

Date:

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலை சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவாவை அண்மித்த மாகாணங்களின் எல்லைப் பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறு ஊவா மாகாண ஆளுனர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...