ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட உள்வாங்கியுள்ளதால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்பாடகுகள் தரைதட்டி உள்ளன. ஆடிக்கடி கடல் உள்வாங்குவதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மாலை மீன்பிடி அனுமதி பெறாமல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன் பிடி விசைப்படகுகள்; மீன்பிடித்து விட்டு இன்று காலை மீன்களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர்.
இந்நிலையில்; மீன்பிடித்து வந்த மீன்பிடி படகுகள் கடல் உள் வாங்கயதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை மீன்வர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர். எனவே தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழிவகை செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் கடந்த வாரம் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஆனால் தற்போது இன்று காலை முதல் தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதியத்திற்கு பின்னர் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என மீனவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதனிடையே ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நிற்கிறது.
TL