Sunday, May 19, 2024

Latest Posts

7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் – கோட்டாவின் பதவி விலகலை உறுதி செய்து சபாநாயகர் அறிவிப்பு

ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யாப்பின் அடிப்படையில் பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்புகளையும் தற்காலிகமாக நிறைவேற்றுவார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் திட்டத்தை ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அதற்கான அமைதியான சூழ்நிலையை நாட்டில் உருவாக்க உதவி செய்யுமாறும் பாதுகாப்பு தரப்பினரிடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நாளை பதினாறாம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும் எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.