Sunday, June 4, 2023

Latest Posts

தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு சரியான முடிவை எடுக்கவேண்டும் – ஈரோஸ் ஜனநாயாக முன்னணி

புதிய ஜனாதிபதி தெரிவில் வடக்கு கிழக்கு மலையகம் இஸ்லாமிய தமிழர்களின் பிரதிநிதிகள் மிகநிதானமாகவும் பொது இணக்கப்பாட்டுடனும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டும் சரியான முடிவை எடுக்கவேண்டும் இவ்வாறு ஈரோஸ் ஜனநாயாக முன்னணி பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாக முறைமையினால் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆரமபித்த இளைஞர்களின் போராட்டாம் மக்கள் போராட்டமாக எழுச்சி பெற்று நாட்டின் ஜனாதிபதி தப்பியோடி இராஜிநாம செய்யுமளவுக்கு வீரியமடைந்ததோடு நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யுமளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளமையானது இலங்கையின் வரலாற்றுப் பதிவாகும்.
நாட்டில் கடந்த 100நாட்களுக்கும் மேலாக மிகப்பலமான போராட்டமொன்று தொடர்கின்றது இப்போராட்டத்தில் தமிழர் தரப்பு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி தங்களுடைய ஆதரவை சில பிரதேசங்களிலும் முழுமையாகவும் சில இடங்களில் பரவலாகவும் தெரிவித்திருந்தனர் குறிப்பாக மலையக பெருந்தோட்ட உழைப்பாளர்கள் தங்களுடைய நாட்சம்பளத்தை தியாகம்செய்து வேலைநிறுத்த போராட்டங்களிலும் பங்குகொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் மலையக மக்கள் உட்பட தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடாமை கவளையளிக்கின்றது நாட்டின் நெருக்கடிக்கான தீர்வு என்பது “தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்கானாது முழுமையடையாது” ஆகவே போராட்டக்காரர்கள் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவர்களின் அறிக்கையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வு தொடர்பாகவும் உள்ளடக்கவேண்டும்
மேலும் தற்போதைய ஜனாதிபதி தெரிவு மக்களுடைய பங்குபற்றலுடன் நடைபெரப்போவதில்லை மாறாக பாராளுமன்ற உறுப்பிணர்களே ஜனாதிபதியை தெரிவுசெய்யப்போகின்றனர் ஆகவே இந்த பா.உறுப்பிணர்கள் மனச்சாட்டியுடன் நடந்துக் கொள்ள வேண்டும் 225 இலட்சம் மக்களின் பிரதிநிதியாக வாக்களிக்கப்போகும் 225 பாராளுமன்ற உறுப்பிணர்களான நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களுடைய பணியை நிறைவேற்றவேண்டும் அதிலும் வடக்கு கிழக்கு மலையக இஸ்லாமிய தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சமூகபொருப்பு இருக்கின்றது ஆகவே பணப்பரிமாற்றத்திற்கும் சூழ்ச்சிகளுக்கும் விளைபோகாது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ளக்கூடிய பிரச்சிணைகளுக்கு தீர்வுகாண துணிந்துமுடிவெடுக்கக்கூடிய நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் ஆற்றலுள்ள நாட்டிலுள்ள துறைசார்ந்த நிபுணர்களை இணைத்துக்கொண்டு முழுமையாக சிவில்நிருவாகமொன்றிற்கூடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒருவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு உங்கள் வாக்கை பயன்படுத்தவேண்டும்.

AR

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.