டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

Date:

உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக அமைச்சர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் உள்ள நிலையில் டயர்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாடு பாரியளவில் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக டயர் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு இறக்குமதி செய்வதால் தேவைக்கு அதிகமான டயர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...