நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை!

Date:

எரிசக்தி அமைச்சு எரிபொருள் வழங்காவிடின் நாட்டின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. எரிபொருளுக்கான கொடுப்பனவை மின்சார சபை செலுத்தாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வழங்கப்படாவிடின் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாற்போகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்தி நிலையத்தில் 60 மெகா வாட் மின்சாரமும் சப்புகஸ்கந்தயில் 102 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இன்று (07) மாலைக்குள் எரிபொருள் வழங்கப்பட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...