சுதந்திர கட்சிக்கு நேரடியாகவே Get out சொல்லும் அமைச்சர் நாமல்

Date:

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்தேன். ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், மக்கள் எந்த இடத்திலும் சிரமப்பட வேண்டியதில்லை. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. அமைச்சரவை என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக் கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...