யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

Date:

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

பதில் பொலிஸ்மா  அதிபரின் பணிப்புரைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமாகிய யுக்திய நடவடிக்கை பொலிஸாரால் நாடு பூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் எனப் பலரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாணம்  பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...