ஞாயிறு தாக்குதல் வழக்கில் மற்றுமொரு முக்கிய புள்ளிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Date:

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை அடுத்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (20) தீர்மானித்தது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் மற்றும் ஆவணங்களுக்கு அமைவாக, முறைப்பாட்டாளர் சாட்சி விசாரணையை இன்றுடன் நிறைவு செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்தார்.

முறைப்பாட்டாளர் சார்பில் 04 சாட்சியாளர்கள் சாட்சிகளை சமர்ப்பித்துள்ளதுடன், 759 ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸர்டீன் ஆகியோர் அடங்கிய விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...