தமிழரசு கட்சி தேர்தல் நாளை, இறுதி நேரத்தில் ஒரு போட்டியாளர் விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

Date:

இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன்.

வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது.

இவ்வாக்கெடுப்பில் பொதுச் சபை உறுப்பினரான தாங்கள் வாக்களிக்க உள்ளீர்கள். இந்நிலையில் தலைவர் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியத்தின் வெற்றிக்காகவும் தமிழ் பண்பாடுகளை அழிவுப்பாதையில் இருந்து காப்பதற்கு இன்றளவிலும் அயராது உழைக்கும் கட்சியாகும்.

இக்காட்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியம் நிலைத்திருப்பதற்காக தமிழ் தேசியபற்றாளன் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.

நானும் தமிழ் தேசிய பற்றாளனாக இருந்தாலும் இன்று சர்வதேச மட்டத்திலும் நமது தமிழ் சமூகத்திலும் இன்றளவில் நற்பொயரும் சிறந்த செல்வாக்கும் பெற்றவராக (பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் உள்ளார்.

ஆகவே தங்களது பொன்னான வாக்குகளை (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சி.சிறிதரன் அவர்களுக்கு வழங்கி தமிழ் தேசியத்தை அழிவுப்பாதையில் இருந்து காத்து என்றும் எமது கட்சியில் தமிழ் தேசிய பண்பாடுகளை நிலைத்திருக்க உதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு எவ்விதத்திலும் நாளை நடக்கும் இத்தலைவர் தெரிவில் தங்களது வாக்குகளை வழங்க வேண்டாம் எனவும் அன்பாக கூறுகின்றேன்.

நன்றி. சீனித்தம்பி யோகேஸ்வரன்இலங்கை தமிழரசுக்கட்சி (தலைவர் பதவிக்காக வேட்பாளர்களில் ஒருவர்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...