பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

Date:

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஜனவரி 20ஆம் திகதி இரவு அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்துள்ளதுடன் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து அனுராதபுரம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கையிடப்பட்டது. 

இதற்கமைய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விசேட பொலிஸ் குழுவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...