களனி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

Date:

மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, களனிப் பல்கலைக்கழகத்தின் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று இரவும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன், இதனால் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது.

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததையடுத்து மாணவர் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜனாதிபதியின் பல்கலைக்கழக வருகைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...