ரஞ்சனின் விடுதலையில் சந்தேகம்

Date:

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (04) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம், பிரதான இடைத்தரகராக செயற்பட்ட வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதி தற்போது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றமையே ஆகும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை நினைவுகூரும் வகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் பாரியளவிலான விளம்பரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்ட போதிலும் பெப்ரவரி 04ஆம் திகதி அது நடைபெறாது என இடைத்தரகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு வழங்கப்படுவாரா இல்லையா என்பது இன்னும் சில மணித்தியாலங்களில் தெரியவரும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...