13 ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலுடன் பேசிய இந்திய இராஜாங்க அமைச்சர்!

0
225

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள முரளிதரன் நேற்றுக் காலை இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here