டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை தேவையில்லை!

0
102

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய பட்சத்தில் அவரை கைது செய்வதற்கு பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) அறிவித்துள்ளார்.

கடந்த மாதம், டயானா கமகேவின் குடியுரிமை குறித்து கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அறிக்கையைப் பெற்று, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் தற்போது தனது குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here