அமைச்சர்களின் வாரிசுகள் உறவினர்களை பின்தொடரும் சிஐடி

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அல்லது அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் அரசு வாகனங்கள் அல்லது பிற சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளது.

அவ்வாறான ஒருவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் முதலில் அமைச்சருக்கு தெரியப்படுத்தவும் பின்னர் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...