பொரளை பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (13ஆம் திகதி) பொரளை, பேஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர என்ற இடத்தில் இராணுவ வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்தார்.
இதன்படி, குறித்த இரண்டு இராணுவ வீரர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.