தேர்தல் வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்க வேண்டும்!

Date:

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்.”

  • இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்தச் செய்தியை தான் நான் புரிந்துகொண்டேன் என்றும் மனோ எம்.பி. கூறினார்.

“அரசை மீறி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை.

தேர்தல் நடத்த அரசு விடாது. ஆகவே, தேர்தல் இடம்பெற வேண்டுமானால், அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டும். வேறு மாற்று வழியில்லை” – என்று மனோ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...

சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி...

உதய கம்மன்பிலவை கைது செய்வதில்லை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த...