இன்று பாராளுமன்றம் கூடுகிறது

0
194

பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (20) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், 21 மற்றும் 22ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி போயா விடுமுறை என்பதால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடாது என நாடாளுமன்ற தலைமைச் செயலாளரும் பிரதிச் செயலாளருமான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை, மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு அனுதாபப் பிரேரணைகளை சமர்ப்பிக்கவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here