காமினி செனரத் முயற்சியில் டொப் 10 வர்த்தகர்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

Date:

இலங்கையின் முன்னணி 20 நிறுவனங்களின் தலைவர்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளனர்.

இதன்படி, இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வர்த்தகர்களுக்கு தமது தேவைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

உண்மையில் தனியார் துறையே இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. எந்தவொரு அரசாங்கமும் இந்த வணிக சமூகத்தை கைவிட முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு இந்த வணிகர்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

இதற்குத் தேவையான பின்னணி பி. பி. ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராக இருந்த இரண்டு வருடங்களில் உருவாக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் தனது பதவியை பொறுப்பேற்று மிகக்குறுகிய காலத்திற்குள் இந்த வர்த்தக சமூகத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியான தொடர்பாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்குரியவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...