அமெரிக்கத் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Date:

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்ப (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போதைய இலங்கையின் பல பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தமையால், தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் போலவே தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம்...

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...