புதிய ஜனநாயக முன்னணியின் சிறப்புக் கூட்டம் நேற்று (24) நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு 07 உள்ள கட்சி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.