திட்டமிட்டபடி நாடு தழுவிய ரீதியில் நாளை பாரிய தொழிற்சங்க போராட்டம்!

Date:

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவை தொழிற்சங்கங்கள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தம் போராட்டம் இடம்பெறவுள்ளது

வங்கி வட்டியை குறைத்தல், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் விலையை குறைத்தல், மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கல், குறைந்த நியாயமற்ற வரிகள், ஓய்வூதிய தாமதத்தை முடிவுக்கு கொண்டு வரல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ளன.

என்றாலும், துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து பயணிகள் அல்லது பொருட்கள் அல்லது உணவு மற்றும் பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் ஆகியவற்றை வெளியேற்றுதல், வண்டி ஏற்றுதல், ஏற்றுதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானியையும் பொருட்படுத்தாதே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

என்றாலும் பொது மக்கள், பாடசாலை மாணவர்களின் வசதி கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வழமை போன்று பஸ்களை இயக்குமென சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...