பத்தேகம, மடேவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு மரண இறுதிச் சடங்கின் போது இரு குழுக்களுக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.