தேசிய எரிபொருள் பாஸ் ஒவ்வொரு செவ்வாய் நள்ளிரவிலும் நிரப்பப்படும்!

Date:

இன்று (மார்ச் 08) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் தேசிய எரிபொருள் பாஸ் (NFP) நிரப்பப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று காலை அனைத்து கணக்குகளும் டாப்-அப் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய எரிபொருள் பாஸ் டாப் அப் செய்யப்பட்டது.

வார இறுதி நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் விநியோக செலவைக் குறைக்கும் முயற்சியில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...