நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) நாட்டின் வரண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும், ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (09) நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
நாடு முழுவதும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
கடல் பகுதிகளில்
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் அல்லது நிலையான திசை எதுவுமின்றி வீசக் கூடும் என்பதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 -35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.