3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது!

Date:

3.5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 09) கைது செய்தனர்.

மொத்தம் 700 போலி 5,000 ரூபாய் நோட்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் திருகோணமலையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் போலி பணம் அச்சிடும் இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...