3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது!

Date:

3.5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 09) கைது செய்தனர்.

மொத்தம் 700 போலி 5,000 ரூபாய் நோட்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் திருகோணமலையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் போலி பணம் அச்சிடும் இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...