Friday, September 20, 2024

Latest Posts

குளத்தில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாப மரணம்!



குளத்தில் குளிர்த்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் செவனகல, கட்டுபில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடும்பச் சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பலர் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கினார்.

அவர் மீட்கப்பட்டு தண்டும வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.