வாகன இறக்குமதிக்கு அனுமதி

Date:

டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் விரைவான டொலர் வரவால் நாட்டில் டொலர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

இதன்மூலம் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களின் சாதாரண இறக்குமதியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அதிக வரிகளை அறவிடுவதே மிகவும் புத்திசாலித்தனமானது என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...