பசில் ராஜபக்ஷவின் திட்டத்தால் இரு பெண் எம்பிக்களுக்கு மிகப்பெரிய அதிஸ்டம்

Date:

கீதா குமாரசிங்க மற்றும் டயானா கமகே ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த டயானா கமகே, தனக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதாக உறுதியளித்து 20ஆவது திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ள பசில் ராஜபக்சவால் அழைத்து வரப்பட்டார்.

தற்போது மூன்று அரச அமைச்சர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக ‘தேசய’ செய்தி வெளியிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் வகித்து வந்த இராஜாங்க அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

தனது அமைச்சின் கடமைகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார். இராஜாங்க அமைச்சரின் அரசியல் விமர்சனம் காரணமாக சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றதையடுத்து அந்த பதவி வெற்றிடமாக உள்ளது.

லொஹான் ரத்வத்த வகித்து வந்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவின் இராஜாங்க அமைச்சர் பதவியும் வெற்றிடமாகவே உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...