ரயில்வே ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து!

Date:

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில்வே துறை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் பெப்ரவரி 23 ஆம் திகதி அத்தியாவசியயாக ரயில் சேவை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை புகையிரத சேவையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் 2023 மார்ச் 14 ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

புகையிரத சேவையை தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் பேணுவதற்கு நாளை (15) பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களிடமும் விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...