கனடா படுகொலை – இறுதிக்கிரியைகள் நிறைவு

Date:

கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.

ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.

இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின.

பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...