கனடா படுகொலை – இறுதிக்கிரியைகள் நிறைவு

Date:

கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.

ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.

இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின.

பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...