விளக்கமறியலில் உள்ள தேசபந்துவுக்கு சிறப்பு பாதுகாப்பு

Date:

நீதிமன்ற உத்தரவின் பேரில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் தற்போது பல்லேகலேயில் உள்ள தும்பர சிறைச்சாலையில் ஒரு பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2023 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பிப்ரவரி 27 ஆம் திகதி, ஐஜிபி தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றப்பிரிவின் 8 அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு, 19 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் அவரை 20 ஆம் திகதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, அன்றைய தினம் அவரது பிணை மனுவை பரிசீலித்த நீதிமன்றம், பிணை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

அதன்படி, அவரை ஏப்ரல் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த மற்ற 6 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...

மேலும் ஒரு கடல் வழி போதை பொருள் கடத்தல் – அறுவர் கைது

இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு...

ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி நீக்கப்படுவாரா?

2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ....