தேசபந்து விடயத்தில் அரசுக்கு முழு ஆதரவு – சஜித்

Date:

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அன்றைய தினம் அரசியலமைப்பு சபையில் இந்த நியமனத்திற்கு எதிராக வாக்களித்தது ஐக்கிய மக்கள் சக்தி என்று பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுக்காக இன்று (25) நடைபெற்ற பட்டறையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐஜிபி நியமனம் அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும், அந்த அரசியலமைப்பை மீறியதற்கு முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகரும் பொறுப்பு என்றும், அரசியலமைப்பு சபையில் நடந்ததை முற்றிலுமாக சிதைத்து உச்ச சட்டத்தின் அப்பட்டமான மீறலில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேசபந்து தென்னகோன் அரசியலமைப்பை மீறி, உச்ச சட்டத்தை மிதித்து சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட அந்த நாட்களில், இன்று கூச்சலிடுபவர்கள் அப்போது அமைதியாக இருந்தனர் என்றும், தாமதமாகிவிட்டாலும், இதுபோன்ற ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...