வெட்டி அகற்றப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின் உயிர் பெற்றது

Date:

கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவொன்று உடலிலிருந்து வெட்டிப் பிரிக்கப்பட்ட கையை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு அவரது இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கையின் துண்டிக்கப்பட்ட பகுதியை ஐஸ் கட்டியில் வைத்து கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயக்க மருந்து நிபுணர், செவிலியர் பணியாளர்கள், சுகாதார உதவிக் குழுக்கள், ரத்த வங்கி என ஏராளமானோரின் ஆதரவு இந்த சத்திரசிகிச்சைக்கு பெறப்பட்டுள்ளது.

திறமையான இலங்கை வைத்தியர்களின் முயற்சியால் இழந்த கை மீண்டும் உயிர்பெற்றது. இத்தகைய திறமையான மருத்துவர்கள் நாட்டின் பெருமைக்கு உரியவர்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...