இலங்கையில் இராணுவத் தளம் ; அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்து!

Date:

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு எப்போதும் இல்லை. பலமுறை இதனை நான் கூறியுள்ளேன். மீண்டும் மீண்டும் கூறுகிறேன். அவ்வாறான எண்ணம் எமக்கு இல்லை.

சோஃபா ( SOFA Agreement) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மறுமதிப்பீடு செய்யவோ அமரிக்காவுக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ராயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க குழு கடந்த பெப்ரவரி மாதம் முக்கிய இலங்கைக்கு வந்திருந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடவே இந்த குழு இலங்கைக்கு வந்திருந்தது.

இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற கோணத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...