தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

0
182

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி, ஊதிய உயர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பை சம்பள நிர்ணய சபை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.

இந்த முடிவு, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தோட்டத் தொழிலாளர்களிடையே ஊதிய நிலைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்பான நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here