தமிழர் நிலம் அழிக்கப்படுகிறது – மாவை எச்சரிக்கை!

Date:

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் இன்று மே தினத்தில் ஒன்று கூடியிருக்கிறோம். காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும், மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம். நிலம், மொழி உள்ளிட்ட விடயத்துக்காக தொழிலாளர் தினத்திலும் பிரகடனங்களாக பகிரங்கமாக முன்வைக்கிறோம்.

இன்றைய மேதின நிகழ்வின் ஊடாக சிதறுண்டுள்ள மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுத்துவதாக உணர்கிறேன்.

விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் விடுதலைக்காகவும் நின்ற மண்ணில் இன்று மே தினம் இடம்பெற்றுள்ளது. அமைதியாகவும், ஜனநாயக வழியிலும் போராட்டங்களை முன்னெடுக்கவும் அடித்தளமாக இன்றைய மே தின நிகழ்வு அமைந்துள்ளதாகவும் அவர் உரையில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...