விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீது விசாரணை

Date:

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இடைக்கால தடை விதிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பாகவும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N.சமரகோன் உத்தரவிட்டார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் சிலரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியில் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு திரும்புகிறார் ரணில்!

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ஒரு வாரத்தில் 500 லட்சம் பணம் தேடுவேன் – லால்

புதிய சொகுசு வீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைக்கு...

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...

தங்கம் விலை நிலவரம்

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய...