விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீது விசாரணை

Date:

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இடைக்கால தடை விதிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பாகவும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N.சமரகோன் உத்தரவிட்டார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக விஜேதாச ராஜபக்ஸ கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் சிலரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியில் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...