ரம்பொட பஸ் விபத்தில் 8 பேர் பலி

0
339

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொட, கரடிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பேருந்து ஓட்டுநர் உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here