பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.

இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

ஏனைய 6 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 10 நிலையங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...