கள்ள நோட்டில் நீதிமன்ற அபராதம் செலுத்திய நபர் கைது

Date:

போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000 ரூபா அபராதத்துடன் அவர் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, களுத்துறை பிரதேசத்தில் போலியான 5000 ரூபா பணத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையில், களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து 5,000 ரூபாய் நோட்டுகள் 11 மற்றும் அச்சு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான தம்பதியினர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...