இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

0
147

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியாவிற்கு பயணமானார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்க உள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ரணில் விக்கிரமசிங்க அங்கு விஜயம் செய்துள்ளதோடு, மே 20ஆம் திகதி அவர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here