பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் செய்தி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து காவல்துறையினர் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிரதமரின் அன்றாட பயண வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தற்போது வழங்கப்படும் பாதுகாப்பைக் குறைக்குமாறு பிரதமர் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் செய்தி மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து நேற்று நாடாளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அப்போது, கேள்விக்குரிய கொலை மிரட்டல் குறித்து ஏற்கனவே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு முன்னர் கிடைத்த தகவல்கள் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.