அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்

Date:

அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

தொழிநுட்ப துறையில் மேலதிக நேர வேலை செய்பவர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கினால் திறைசேரியின் சுமையை குறைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துச் சபை மற்றும் மஹாபொல தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்ட திறன்மிக்க பணியாளர்களை நாடு திரும்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அரச துறைகள் தொடர்பில் தொழிற்சங்கங்களிடம் இருந்து யோசனைகளை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோண்டத் தோண்ட வரும் மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம், செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக...

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...