தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் வருவதில் சட்ட சிக்கல்

Date:

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் அரசாங்கத்துடன் டீல் செய்தால் அந்த ஆசனம் இரத்து செய்யப்படும்.

தம்மிக்க பெரேரா அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்று முன்னர் வெளியான தகவல்களின் காரணமாக அவரது பல வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாட்டின் அதிகாரம் மிக்க அமைச்சு ஒன்றை அவருக்கு வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலீட்டுத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பல விடயங்களும் அவரது அமைச்சுக்குள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...