Wednesday, June 26, 2024

Latest Posts

ஊடகவியலாளரிடம் வணங்கி மன்னிப்புக் கோரிய அரச அதிகாரிகள்!

இரத்தினபுரி மாவட்ட செயலர் அலுவலகத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் சரத் விமலரத்னவிடம் அப்போதைய மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி, கான்ஸ்டபிள், இராணுவ அதிகாரி ஆகியோர் திறந்த நீதிமன்றில் பணிந்து மன்னிப்புக் கேட்டதாக செய்தி வந்துள்ளது.

ஊடகவியலாளர் சரத் விமலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அது தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டு, மனுதாரர் ஊடகவியலாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

மேலும் மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என பதில் அளித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், மனுதாரரிடம் மன்னிப்புக் கோருவதற்கு பிரதிவாதிகள் தயாராக இருப்பதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் ஒப்புக்கொண்டார்.

இதன்படி, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் ஆளுநர் மாலனி லொகுபோதாகம, அந்த அலுவலகத்தின் அலுவலர் அனுராத பண்டார, இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமீர, கான்ஸ்டபிள் குருவிட்ட, இராணுவ முகாமின் கோப்ரல் சேனநாயக்க ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி, பின்னர் திறந்த நீதிமன்றத்தில் ஊடகவியலாளரிடம் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர்.

மே 29, அன்று இரத்தினபுரி மாவட்ட செயலாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட நோட்டீஸின் படி, அவர் ஹெல்மெட் அணிந்து அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அப்போது அங்கிருந்த பொலிஸ் இராணுவ அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.