அரச ஊழியர்கள் குறித்த அமைச்சரவை முடிவு இதோ

Date:

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவன ஊழியர்களை தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...