அரச ஊழியர்கள் குறித்த அமைச்சரவை முடிவு இதோ

Date:

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவன ஊழியர்களை தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...